கராத்தே போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த அரசு பள்ளி மாணவர்கள்

கராத்தே டேக்வாண்டோ போட்டியில் கின்னஸ் சாதனை படைத்த அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைபள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அரசு பள்ளி மாணவர்கள் கராத்தே டேக்வான்டோ போட்டியில் கலந்துகொண்டு தொடர்ந்து ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 411 கிக் செய்து உலக கின்னஸ் சாதனை நிகழ்த்தி உள்ளனர். இதற்கு முன் வட இந்தியாவை சேர்ந்த மாணவர்கள் கராத்தே டேக்வான்டோ போட்டியில் நிகழ்த்திய உலக சாதனையை அலங்காநல்லூர் மாணவர்கள் முறியடித்துள்ளனர். இதையடுத்து, கின்னஸ் சாதனை பெற்ற மாணவர்களுக்கு ஆசிரியர்கள் இனிப்புகள் வழங்கினர். மாணவர்களுக்கு பதக்கங்களும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

Exit mobile version