யோகா விழாவை முன்னிட்டு கின்னஸ் சாதனை நிகழ்ச்சி

யோகா விழாவை முன்னிட்டு தனியார் அமைப்பு சார்பில் கின்னஸ் சாதனை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

ஸ்ரீஸ்ரீ யோக என்ற 5 நாள் யோகா பயிற்சி திருப்பூர் முழுவதும் பல்வேறு இடங்களில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வு யோகாவை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடைபெற்றது. திருப்பூர் கே.எஸ்.சி மைதானத்தில் கின்னஸ் சாதனை புரிவதற்காக மற்றும் Limca books of records-ல் இடம் பிடிப்பதற்காக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, மூன்று நிமிடங்கள் ‘வீரபத்ராசனம்’ என்ற ‘வாரியர் போஸ்’ நிகழ்த்தினர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

Exit mobile version