திருவொற்றியூரில் டெம்போவில் இருந்த குட்கா போதை பொருட்கள் பறிமுதல்

சென்னை திருவொற்றியூரில் கேட்பாரற்று நின்ற டெம்போ ஒன்றில் இருந்த குட்கா பொருட்களை பறிமுதல் செய்திருக்கும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்னை திருவொற்றியூர்-எண்ணூர் சாலையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்திற்கிடமாக நின்று கொண்டிருந்த டெம்போ ஒன்றை சோதனையிட்ட போலீசார், அதில் குட்கா போதை பொருட்கள் இருப்பதை கண்டனர்.

இதனையடுத்தை அவற்றை பறிமுதல் செய்த போலீசார், பதிவு எண்ணை வைத்து டெம்போவின் உரிமையாளர் மற்றும் கடத்தல்காரர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர். இதனிடையே பறிமுதல் செய்யப்பட்ட குட்காவின் மதிப்பு 2 லட்சம் ரூபாய் இருக்கும் என தெரியவந்துள்ளது.

Exit mobile version