55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்க அறிவுறுத்தல்!

மும்பையில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 3 காவலர்கள் உயரிழந்த நிலையில், 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மும்பையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டியுள்ளது. கடந்த 3 நாட்களில் 3 காவலர்கள் கொரோனா பாதிப்பால் உயிரிழந்த நிலையில், 55 வயதுக்கு மேற்பட்டோருக்கு எளிதில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு ஆளாவதாகவும், அந்த வயதினர் அதிக ஆபத்துக்கு உட்பட்டவர்கள் என்றும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இதையடுத்து, மும்பை தலைமை காவலர் பாரம்பீர் சிங், 55 வயதுக்கு மேற்பட்ட காவலர்கள் வீட்டிலே இருக்கும் படி அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version