ஜி.எஸ்.டி. ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

ஜி.எஸ்.டி. ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.

ஜிஎஸ்டி படிவங்களை தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரும் 31ஆம் தேதி என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் இந்த காலக்கெடுவை அடுத்த ஆண்டு மார்ச் மாதம் 31ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதற்கு தேவையான படிவங்களை இணையத்தில் இருந்து பெற்றுக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக ஜிஎஸ்டி கணக்குகளை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என இந்திய வர்த்தகர் சங்க கூட்டமைப்பு சார்பில் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியிடம் கோரிக்கை விடப்பட்டிருந்தது.

Exit mobile version