பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி. மூலம் ரூ.1,05,366 கோடி வசூல்

பிப்ரவரி மாதத்தில் ஜி.எஸ்.டி மூலமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி மூலம் கிடைத்திருக்கும் வருவாய் குறித்து மத்திய நிதியமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், பிப்ரவரி மாதத்தில் மத்திய ஜி.எஸ்.டி மூலம் 20 ஆயிரத்து 569 கோடி ரூபாய் வருவாயும், மாநில ஜி.எஸ்.டி மூலம் 27 ஆயிரத்து 348 கோடி ரூபாய் வருவாயும் மற்றும் ஒருங்கிணைந்த ஜி.எஸ்.டி மூலம் 48 ஆயிரத்து 503 கோடி ரூபாய் வருவாயும் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தமாக பிப்ரவரி மாதத்தில் மட்டும் ஜி.எஸ்.டி மூலமாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 366 கோடி ரூபாய் வருவாய் கிடைத்துள்ளதாக மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version