ஜி.எஸ்.எல்.வி.எப் -10 ராக்கெட் பயணம் தோல்வி

ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட செயற்கைக்கோளின் பயணம் தோல்வியில் முடிந்தது.

புவி கண்காணிப்புப் பணிகளுக்காக இஓஎஸ்-03 என்ற அதிநவீன செயற்கைக்கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தயாரித்தது. இந்த செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்துவதற்கான ஏற்பாடுகள், ஆந்திராவின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் நடைபெற்று வந்தன. 26 மணிநேர கவுண்ட்டவுன் நிறைவடைந்ததும், இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து இன்று காலை 5.43 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது.

இரண்டாவது நிலையை கடந்து மூன்றாவது நிலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக ராக்கெட்டின் கிரையோஜெனிக் இன்ஜினில் திடீரென தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதன் காரணமாக ராக்கெட்டின் பயணத் திட்டம் முழுமை பெறவில்லை என இஸ்ரோ தலைவர் சிவன் அறிவித்தார். இதனால், செயற்கைக்கோளை சுமந்து சென்ற ஜி.எஸ்.எல்.வி. எப்-10 ராக்கெட்டின் பயணம் தோல்வியில் முடிந்தது. 2017ம் ஆண்டுக்கு பிறகு இஸ்ரோவின் ஒரு ராக்கெட்டின் பயணம் தோல்வி அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version