ஜிஎஸ்எல்வி. மார்க் 3 ராக்கெட் சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து செலுத்தப்படும் 67-வது ஏவுகணை

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து வெற்றிகரமாக செலுத்தப்பட்ட ஜிஎஸ்எல்வி. மார்க் 3 ராக்கெட் பல்வேறு சிறப்பம்சங்கள் கொண்டதாகும்.

சதீஷ் தவான் ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்தப்பட்ட 67வது ராக்கெட் ஆகும். இந்தியாவில் இருந்து அனுப்பப்படும் 33வது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஜிசாட் என்பதும், 2வது ஏவுதளத்தில் இருந்து செலுத்தப்படும் 23வது ராக்கெட் ஜிஎஸ்எல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடப்பு ஆண்டில் இந்தியாவில் இருந்து செலுத்தப்படும் 5வது ராக்கெட் இதுவாகும். மேம்படுத்தப்பட்ட 2வது ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் என்பது இதன் சிறப்பம்சமாகும்.

Exit mobile version