ஆயுட்காலம் முடிந்த மற்ற செயற்கைகோள்களின் பணிகளை ஜிசாட் 31 செயற்கைகோள் மேற்கொள்ளும்

சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் 3 நாள் பயிற்சி வகுப்புகளை துவக்கி வைத்து பேசிய மயில்சாமி அண்ணாதுரை, ஜிசாட் 31 சரியான பாதையில் பயணித்துள்ளதாக தெரிவித்தார்.

ஆயுட்காலம் முடிவடைந்த மற்ற செயற்கைகோள்களின் பணிகளை, ஜிசாட் 31 செயற்கைகோள் மேற்கொள்ளும் என, சந்திராயன் திட்ட இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் சார்பில் கல்லூரி மாணவர்களை தொழில்நுட்பரீதியாக தயார்படுத்தும் வகையில், தமிழகத்தில் 16 திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளது என்றும் கூறினார். 

Exit mobile version