பிப்ரவரி 19-ல் குரூப் 4 தேர்வுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிப்பு

குரூப் 4 தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு வரும் 19ம் தேதி முதல் நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

வி.ஏ.ஓ, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு கடந்த செப்டம்பர் மாதம் 1ம் தேதி நடத்தப்பட்டு நவம்பர் மாதம் 12ம் தேதி அன்று முடிவுகள் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் இந்த தேர்வுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு, சென்னையிலுள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 19ம் தேதி முதல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கலந்தாய்விற்கான தற்காலிகப் பட்டியலை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் போன்ற விவரம் அடங்கிய “அழைப்புக் கடிதத்தினை” தேர்வாணைய இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அழைப்புக் கடிதம் தபால் மூலம் அனுப்பப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேர்வர்கள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு வரத் தவறும் தேர்வர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version