குரூப்-4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள், பயின்ற ஆசிரியரிகளிடம் ஆசி பெற்றனர்

குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றவர்கள் தாங்கள் பயின்ற இலவச பயிற்சி மையத்தில் பணி நியமன ஆணையுடன் ஆசி பெற்றனர்

கடலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய பயிற்சி வகுப்புகள் இலவசமாக நடத்தப்பட்டு வருகிறது. 2013-14 ஆம் ஆண்டில் மாவட்ட நூலகம் சார்பில் அமைக்கப்பட்ட இந்த பயிற்சி மையத்தில், ஏழை, எளியோருக்கு இலவச பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.

தற்போது நடந்து முடிந்த குரூப் 4 தேர்வில் இந்த பயிற்சி மையத்தில் பயின்றவர்களில் 43 பேர் தேர்வாகினர். அவர்கள் அனைவரும் தங்களுக்கு பயிற்சியளித்த பயிற்சியாளரிடமும், நூலக அலுவலரிடமும் பணி நியமன ஆணையுடன் சென்று ஆசி பெற்றனர். மேலும் தங்களுக்கு இலவச பயிற்சி மையம் அமைத்து கொடுத்து உதவிய தமிழக அரசுக்கும் நன்றி தெரிவித்தனர்

Exit mobile version