டி. என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேடு : மேலும் 2 பேர் கைது

 குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 2 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கரூர் மற்றும் மயிலாடுதுறையை சேர்ந்தவர்கள் கைதாகி உள்ளனர். அவர்களிடம் சிபிசிஐடி தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் 2017-ல் நடந்த குரூப் 2 ஏ தேர்வில் முறைகேடாக தேர்ச்சி அடைந்து அரசு பணியில் சேர்ந்துள்ளனர்.

இதனிடையே, இடைத்தரகர் ஜெயக்குமாரிடம் 2ஆவது நாளாகவும், ஓம்காந்தனிடம் 4-ஆவது நாளாகவும் சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். குரூப் 4 மற்றும் குரூப் 2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக இதுவரை 34 பேரை சிபிசிஐடி காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

Exit mobile version