தமிழகம் முழுவதும் இன்று குரூப்-1 தேர்வு நடைபெறுகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப் ஒன் முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது.

துணை ஆட்சியர், காவல் துணை கண்காணிப்பாளர் உள்ளிட்ட பதவியிடங்களுக்காக குரூப் ஒன் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அந்த வகையில், தற்போது காலியாக உள்ள 66 பணியிடங்களுக்கு இன்று தேர்வு நடைபெறுகிறது. இத்தேர்வில் மொத்தம் 2 லட்சத்து 57 ஆயிரத்து 237 தேர்வாளர்கள் தேர்வு எழுதுகின்றனர். இதில், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 825 பெண் தேர்வாளர்களும், ஒரு லட்சத்து 28 ஆயிரத்து 401 ஆண் தேர்வாளர்களும் உள்ளனர். மேலும், பதினோறு மூன்றாம் பாலித்தனவர்களும் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் மட்டும் 46 ஆயிரத்து 965 பேர் தேர்வு எழுத உள்ள நிலையில், தமிழ்நாடு முழுவதும் 856 இடங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டுள்ளது. தேர்வுகள் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.

 

Exit mobile version