மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியின் அருகே கையெறி குண்டுகள் வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தநிலையில், இன்று முர்ஷிதாபாத் மக்களவை தொகுதிக்குட்பட்ட ராணி நகரில் உள்ள வாக்குச்சாவடி அருகே, மர்மநபர்கள் சிலர் கையெறி குண்டுகளை வீசினர்.
இதனால் அப்பகுதியில் பதற்றமான சூழல் உருவானது. இதுகுறித்து அம்மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வருகின்றனர்.