ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவு – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

பொதுமக்களின் எதிர்ப்பின் காரணமாக ஸ்டெர்லைட் ஆலைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கு எதிராக ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம், வேதாந்தா குழுமம் சார்பில் தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்து வந்த பசுமை தீர்ப்பாயம் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்தநிலையில், தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு மீதான விசாரணை ஒரு வாரகாலத்திற்குள் எடுத்துக்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்டெர்லைட் தொடர்பாக வேதாந்தா குழுமம் உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version