ஆசிய விளையாட்டுப் போட்டியில் பதக்கங்களை வென்ற தமிழக மூதாட்டி

மலேசியாவில் நடைபெற்ற 21 வது ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்று தாயகம் திரும்பிய 73 வயதுடைய மூதாட்டிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள அணைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் திலகவதி. 73 வயதான இவர் ஓய்வு பெற்ற விளையாட்டு ஆசிரியை. கடந்த 15 வருடங்களுக்கு முன்னர் அரசு பள்ளியில் விளையாட்டு ஆசிரியையாக இருந்து ஓய்வு பெற்றார். இவர் சிறுவயதிலேயே விளையாட்டில் ஆர்வம் காட்டி வந்த நிலையில், மாநில, தேசிய விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பல்வேறு பரிசுகளை வென்றுள்ளார். மேலும், இவர் விளையாட்டு ஆசிரியையாக இருந்த பொழுது, மாணவ மாணவியர்களுக்கு சிறந்த பயிற்சி அளித்ததில், இவரிடம் பயிற்சி பெற்ற மாணவ மாணவியர்கள், பல்வேறு விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொண்டு பதக்கங்களை வென்றுள்ளனர். இந்நிலையில் மலேசியாவில் நடைபெற்ற 21வது ஆசிய விளையாட்டுப் போட்டியில், இந்தியா சார்பில் திலகவதி கலந்து கொண்டார். அதில், முதியோருக்கான பல பிரிவுகளில், ஒரு தங்கம் மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தார்.

Exit mobile version