பிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக பிரமாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமவுலி ட்வீட்!!

பிரபல தெலுங்கு சினிமா இயக்குனரான எஸ்.எஸ்.ராஜமவுலி பிளாஸ்மா தானம் செய்ய உள்ளதாக கூறியுள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட அவர், கொரோனா தொற்று ஏற்பட்ட நிலையில், 2 வாரங்கள் தனிமைபடுத்துதலுக்கு பிறகு தற்போது கொரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், ஆண்டிபாடி செல்கள் உருவாகியிருப்பதை உறுதி செய்ய 3 வாரங்கள் காத்திருக்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

 

Exit mobile version