ரயில்வே டிராக்மேன் பணியில் பட்டதாரி இளைஞர்

பணி உத்தரவாதத்தினால் ஐஐடி படித்த பட்டதாரி இளைஞர் ரயில்வே டிராக்மேன் பணியில் சேர்ந்துள்ளது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது

பீகார் மாநிலத்தை சேர்ந்த ஷ்ரவன்குமார் என்பவர், மும்பை ஐஐடியில் பி.டெக் மற்றும் எம்.டெக் படித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டு முதல் அரசு பணிக்காக அவர் தொடர்ந்து முயற்சித்து வந்த நிலையில், சமீபத்தில் ரயில்வே துறையில் ரயில்வே பணிக்கான ஆர்.ஆர்.பி தேர்வு எழுதி வெற்றி பெற்றார். இதனையடுத்து அவருக்கு ரயில்வே டி பிரிவு பணி கிடைத்தது. இந்த வேலைவாய்ப்ப்பிற்கு 10 வகுப்பு படித்தாலே போதும் என்ற நிலையில், அவர் சேர்ந்துள்ளது ரயில்வே அதிகாரிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து பேசிய ஷ்ரவன்குமார், பணி உத்தரவாதம்தான் அரசு வேலைக்கு காரணம் என்று தெரிவித்தார்.

Exit mobile version