கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தல்

விலை உயர்த்தப்பட்ட கோவிஷீல்டு, கோவாக்சின் தடுப்பூசி மருந்துகளின் விலையை குறைக்க மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.

சீரம் நிறுவனத்தின் கோவிஷீல்டுயும், பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின் தடுப்பூசியும் அண்மையில் பல மடங்கு விலை உயர்த்தப்பட்டன.

மே 1 முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ள நிலையில், திடீர் விலை உயர்வுக்கு மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.

பல்வேறு மாநிலங்களின் கோரிக்கையை ஏற்று, சீரம் மற்றும் பாரத் பயோடெக் நிறுவனங்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய மத்திய அரசு, தடுப்பூசிகளின் விலையை குறைக்க வலியுறுத்தியுள்ளது.

Exit mobile version