சாதிய ஆணவப்படுகொலைக்கு ஆளான நந்தீஷ்க்கு, தமிழக அரசு பட்டா : இயக்குனர் பா.ரஞ்சித் நன்றி

சாதிய ஆணவபடுகொலைக்கு ஆளான நந்தீஷ் வீட்டிற்கு, தமிழக அரசு பட்டா வழங்கியதற்கு இயக்குனர் பா.ரஞ்சித் நன்றி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதிகளில், பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க இயக்குனர் பா.ரஞ்சித் சென்றிருந்தார். அப்போது கடந்தாண்டு சாதிய ஆணவபடுகொலைக்கு ஆளான நந்தீஷ் வீடு அமைந்துள்ள சூடுகொண்டப்பள்ளி கிராமத்திற்கு சென்று, அவரது குடும்பத்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த பா.ரஞ்சித், தமிழக அரசு அறிவித்ததை போல நந்தீஷ் வீட்டிற்கான பட்டாவினை வழங்கி உள்ளது, அதே போல நந்தீஷ் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளதை விரைந்து செயல்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Exit mobile version