மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள்: அரசாணை வெளியீடு

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாள் என அறிவித்ததற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் பெண் குழந்தைகளை பாதுகாக்க மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கையின் காரணமாக அவரது பிறந்தநாளை மாநில பெண் குழந்தைகள் பாதுகாப்பு நாளாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். பல்வேறு தரப்பினரால் வரவேற்கப்பட்ட இந்த அறிவிப்புக்கு தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. மேலும் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை வலியுறுத்தும் வகையில் மாவட்ட அளவில் மனித சங்கிலி, பேரணிகள் மற்றும் கருத்தரங்குகள் நடத்திடவும் கோரப்பட்டுள்ளது.

இதேபோல், அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளில் பெண் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த உறுதிமொழியை ஏற்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Exit mobile version