தீபாவளி விடுமுறையை எடுக்காமல் அரசு ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள் – அமைச்சர் விஜயபாஸ்கர்

தமிழகம் முழுவதும் காய்ச்சலை கட்டுப்படுத்த தீபாவளி விடுமுறையை கூட எடுக்காமல் சுகாதாரத்துறை, உள்ளாட்சித்துறை மற்றும் வருவாய்த்துறை ஊழியர்கள் பணியாற்றி வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

சென்னை கோயம்பேடில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் பரவும் பன்றிக்காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலை கடுப்படுத்த அரசின் பல்வேறு துறைகள் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாக கூறினார்.

தமிழகம் முழுவதும் காய்ச்சலை கட்டுப்படுத்தும் விதமாக 1200 குழுக்கள் தீவிரமாக பணியாற்றி வருவதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

Exit mobile version