ராஜீவ்காந்தி கொலையில் ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார்: அமைச்சர் சி.வி.சண்முகம்

ராஜீவ்காந்தி கொலையில் சிறையில் இருக்கும் ஏழு பேரை விடுவிக்க, தமிழக ஆளுநர் நல்ல முடிவை எடுப்பார் என்று எதிர் பார்த்திருப்பதாக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் பத்தாவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்த அவர், சட்டக்கல்லூரிகள் சிறப்பாக செயல்படுவதற்காக, ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் நிதி வழங்க, முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளதாக கூறினார்.  

Exit mobile version