குடியரசுத்தலைவர் மாளிகையில் ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் சந்திப்பு

டெல்லியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் ஜம்மு காஷ்மீர் ஆளுநர் சத்தியபால் மாலிக் சந்தித்தார்.

டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், டெல்லி வந்துள்ள ஜம்மு- காஷ்மீர் ஆளுநர் சத்யபால் மாலிக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார். காஷ்மீரில் தற்போது நிலவி வரும் சூழல் குறித்தும், பாதுகாப்பு குறித்தும் குடியரசுத் தலைவரிடம் ஆளுநர் எடுத்துரைத்தாக தெரிகிறது.

இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து அங்குள்ள சட்டம் ஒழுங்கு மற்றும் அரசியல் கட்சியினர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக வந்த செய்திகள் தொடர்பாகவும், பல்வேறு விஷயங்கள் பற்றி ஆளுநர் குடியரசுத் தலைவரிடம் எடுத்துக்கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன

Exit mobile version