ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு ஆளுநர் பன்வாரிலால் புரோகித், ஆசிரியர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

கல்வியாளரும், முன்னாள் குடியரசுத் தலைவருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாள் ஆசிரியர் நாளாகக் கொண்டாடப்படுவதாகக் ஆளுநர் குறிப்பிட்டுள்ளார். வகுப்பில் பயிலும் ஒவ்வொரு மாணவனின் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதில் ஆசிரியர்களின் பங்கு மிகப்பெரியதாகும் எனக் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியரின் செயல்கள், எண்ணங்கள் ஆகியவை மாணவரின் தனித்தன்மைக்குக் காரணமாக உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். ஒரு நல்ல புத்தகம் மாணவருக்கு மிகச் சிறந்த ஆசிரியராகும் எனக் காந்தியடிகள் கூறியதையும் குறிப்பிட்டுள்ளார். ஆசிரியர்களின் பணிகளை அங்கீகரிப்பதும், அவர்கள் தங்கள் தொழிலைச் சிறப்பாகச் செய்யத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதும் நமது கடமை எனக் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version