அரசு நலவாழ்வு மையம்-அமைச்சர் கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி அருகே சிங்கத்தாகுறிச்சி அரசுநலவாழ்வு மையத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

முன்னதாக முதலமைச்சர் பழனிசாமி தலைமைச்செயலகத்தில் இருந்து காணொலிக்காட்சி மூலம் சிங்கத்தாகுறிச்சி அரசு நலவாழ்வு மையத்தை திறந்து வைத்தார். பின்னர் நடந்த விழாவில் குத்துவிளக்கேற்றி அமைச்சர் கடம்பூர் ராஜூ பணிகளைத் துவங்கி வைத்தார். இம்மையம் மூலம் மக்களுக்கான பிரசவ பணி, பிரசவத்திற்கு பின் கவனிப்பு, இசிஜி வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்துதரப்படும் எனக்கூறப்பட்டுள்ளது.இந்த மையத்தினால் பூவாணி, ஆலந்தா, சவலாப்பேரி, வல்லக்குளம், சேதுராமலிங்கபுரம் மற்றும் நாணல்காட்டான்குளம் ஆகிய கிராமங்களை சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பொதுமக்கள் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version