விலையில்லா முகக் கவசங்கள் வழங்க அரசாணை வெளியீடு!!

குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்திற்கு, தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பரவலைத் தடுப்பதற்காக பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அண்மையில் அறிவித்திருந்தார். இதனைத் தொடர்ந்து, தமிழகத்தில் 2 கோடியே 8 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா முகக்கவசங்கள் வழங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதன்மூலம், 6 கோடியே 74 குடும்ப உறுப்பினர்களுக்கு தலா 2 முகக்கவசங்கள் வீதம் 13 கோடியே 48 லட்சம் முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

Exit mobile version