விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் பாரம்பரிய நாட்டுப்புற கலைகளை காக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மண்ணின் கலை நிகழ்ச்சியை ஏராளமானோர் கண்டு ரசித்தனர். இதில், தெருக்கூத்து, கரகாட்டம், ஒயிலாட்டம், சிலம்பாட்டம், குச்சிபிடி என பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் கலை நிகழச்சியை கண்டு ரசித்தனர்.
தமிழக அரசு நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மாதந்தோறும் ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த ஓய்வூதியத்தை உயர்தி வழங்க தமிழக அரசுக்கு நாட்டுபுற கலைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.