மாணவர் சேர்க்கையில் தொடர் சாதனை பெற்று வரும் அரசு பள்ளி

நிலக்கோட்டையில் பள்ளி திறந்த முதல் நாளில் 100 சதவிகித  மாணவர் சேர்க்கை பெற்று அரசு தொடக்க பள்ளி சாதனை படைத்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகேயுள்ள அருமைஅம்மைநாயக்கனூர் பேரூராட்சியில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளி துவங்கிய முதல் நாளிலேயே 100 சதவிகித மாணவர் சேர்க்கை என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளது. இந்த பள்ளியில் கடந்த ஆண்டு 297 மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. அதேபோல், இந்தாண்டும் மீண்டும் சாதனை படைத்துள்ளது. பள்ளிக்கு தேவையான அனைத்து வசதிகளையும் பள்ளி தலைமையாசிரியர் ஆர்தர் செய்துள்ளார். இங்கு ஆசிரியர்கள் தமிழ்மொழியோடு சேர்த்து ஆங்கில வழிக்கல்வியையும் பயிற்றுவிப்பதால், தனியார் பள்ளிகளுக்கு இணையாக கல்வி கிடைப்பதாக கூறி, பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை இப்பள்ளியில் சேர்ந்து வருகின்றனர்.

Exit mobile version