தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் அரசு பள்ளி

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் ஏசி பொருத்தப்பட்டு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் உள்ளிட்டவை செயல்படுத்தப்பட்டுள்ளதால் தனியார் பள்ளிகளுக்கு சவால்விடும் வகையில் உள்ளது.

காங்கேயம் முத்தூர் அருகே உள்ள வேலாயுதம்பாளையத்தில் இயங்கிவரும் அரசு நடுநிலைப்பள்ளியில் பெற்றோர், ஆசிரியர் கூட்டு முயற்சியில் ஏசி பொருத்தப்பட்டுள்ளது. இந்தப் பள்ளியில் ஸ்மார்ட் கிளாஸ், கராத்தே, யோகா, கல்விச் சுற்றுலா, பேருந்து வசதி, சுத்தமான குடிநீர், கழிவறை வசதிகள் உள்ளிட்டவை முறையாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாணவர்களின் வருகை குறைந்திருந்த இந்தப் பள்ளியில் தற்போது தங்களது குழந்தைகளை சேர்க்க பெற்றோர் ஆர்வத்துடன் முன்வருகின்றனர்.

Exit mobile version