மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் கூடுதலாக நிதி ஒதுக்கி அரசாணை வெளியீடு!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு கூடுதலாக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் உள்ள எம்.ஜி. ஆர் நினைவிட வளாகத்தில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு நினைவிடம் கட்ட தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. 50 கோடியே 80 லட்சம் ரூபாய் மதிப்பில் திட்டமிடப்பட்டு பீனிக்ஸ் பறவையை போன்ற வடிவமைப்புடன், இந்த நினைவிடம் தயாராகி வருகிறது. 80% பணிகள் நிறைவடைந்த நிலையில் கட்டுமான பணிகளுக்கு கூடுதல் நிதித் தேவை உள்ளதை அதிகாரிகள் சுட்டிக்காட்டினர். அதைத்தொடர்ந்து கூடுதலாக 7 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவிட்டு, அதற்கான அரசாணையை வெளியிட்டுள்ளது. இம்மாத இறுதிக்குக்குள் பணிகளை முடிக்க தமிழக அரசு உத்தரவிட்டதால் இறுதிகட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Exit mobile version