பள்ளிகள் திறக்கும் வரை உணவு பொருள் வழங்க அரசு உத்தரவு!

மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் கீழ் பயனடையும் தொடக்கப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளிகள் திறக்கப்படும் நாள் வரை அரிசி, பருப்பு, உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை அரசுச் செயலாளர் மதுமதி, அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், சத்துணவுத் திட்டத்தின் கீழ் பயனடையும் தொடக்கப் பள்ளி மற்றும் உயர் தொடக்கப்பள்ளி மாணவ, மாணவியருக்கு, நிர்ணயிக்கப்பட்ட அளவின்படி, பள்ளிகள் திறக்கப்படும் வரை, அரிசி பருப்பு மற்றும் உலர் உணவுப் பொருட்களை தொடர்ந்து வழங்குமாறும், உணவுப் பொருட்களை தமிழ்நாடு குடிமைப் பொருள் வாணிபக் கழகத்திடமிருந்து கொள்முதல் செய்து கொள்ளுமாறு சமூக நல ஆணையருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version