டிசம்பர் மாதம் வரை சனிக்கிழமைகளில் அரசு அலுவலகங்கள் செயல்படும்!

தமிழகத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக, தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்ட ஊரடங்கால் கடந்த 5 மாதங்களாக அரசு அலுவலங்கள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. செப்படம்பர் ஒன்றாம் தேதி முதல் அனைத்து அரசு அலுவலகங்கள் 100 சதவீத ஊழியர்களுடன் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக அரசு அலுவலகங்கள் இயங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதையும், தேங்கியுள்ள பணிகளை விரைந்து முடிக்கும் வகையிலும், டிசம்பர் மாதம் வரை அனைத்து சனிக்கிழமைகளிலும் அரசு அலுவலலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மாதத்தில் இரண்டாவது சனிக்கிழமை, அரசு அலுவலகங்களில் கிருமி நாசினி தெளிப்பதற்காக அறிவிக்கப்பட்ட விடுமுறையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version