ஒரே இடத்தில் 3 ஆண்டுகளாக பணியாற்றும் அரசு அதிகாரிகள் இடமாற்றம்

மக்களவைக்கு விரைவில் தேர்தல் அறிவிக்கப்படவுள்ள நிலையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். மக்களவைக்கு இந்த ஆண்டு தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான பணிகளில் தேர்தல் ஆணையம் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ உத்தரவிட்டுள்ளார்.

காவல் அதிகாரிகள் உள்ளிட்டோரை இடமாற்றம் செய்து, பிப்ரவரி 15ம் தேதிக்குள் அதற்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவில் கூறப்படும். மேலும், ஏற்கனவே பணியிட மாற்றம் செய்த அதிகாரிகளின் விவரங்களை தரவேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version