மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

 மேகேதாட்டு அணை விவகாரத்தில் தமிழக அரசு 4 வார காலத்திற்குள் பதிலளிக்க வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேகேதாட்டு அணை விவகாரத்தில் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடக அரசுக்கு அளித்துள்ள அனுமதிக்குத் தடை கோரி தமிழக அரசும் புதுச்சேரி அரசும் கடந்தாண்டு இறுதியில் உச்ச நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்தன. தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்க மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதைத் தொடர்ந்து கர்நாடகம் அரசும், மத்திய அரசும் பதில் மனுத்தாக்கல் செய்தன.

இந்நிலையில் மேகேதாட்டு அணை தொடர்பாக விரிவான திட்ட அறிக்கையை மத்திய நீர் ஆணையத்தின் திட்ட ஆய்வு நிறுவனத்தின் தலைமைப் பொறியாளருக்கு கர்நாடக    நீர்வளத்துறையின் முதன்மைச் செயலாளர் கடந்த 18ஆம் தேதி அளித்துள்ளார். இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு சார்பில் திங்கள்கிழமை பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் மேகேதாட்டு விவகாரம் தொடர்பான மனுக்கள் மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது.

இந்த விவகாரத்தில் 4 வாரத்திற்குள் பதில்மனு தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Exit mobile version