பொதுச்சேவைக்காக தனியாருக்கு அரசு நிலம் வழங்கப்படுகிறது : ஓ.பன்னீர் செல்வம்

பொதுச் சேவைக்காக மட்டுமே தனியார்களுக்கு அரசு நிலம் வழங்கப்படுவதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் உறுப்பினர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அவர், அரசு வழங்கிய நோக்கத்திற்கு மாற்றாக அந்த நிலத்தை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் அதனை தமிழக அரசு திரும்ப பெற்றுக்கொள்ளும் என எச்சரித்தார். 

Exit mobile version