ஸ்டெர்லைட் ஆலையை மூட அரசுக்கு முழு அதிகாரம் இருக்கிறது: தமிழக அரசு வாதம்

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் உள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிர்த்து வேதாந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் சிவஞானம் தலைமையிலான அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மாசு ஏற்படுத்துவதை தடுக்கும் வகையில் ஆலைகளை மூட தமிழக அரசுக்கு முழு அதிகாரம் இருப்பதாக தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டது நியாயமானது தான் என வாதிட்ட அரசு தரப்பு வழக்கறிஞர், தடை உத்தரவை மீறி ஆலையை இயக்கியதால் நிரந்தரமாக மூடி சீல் வைக்கப்பட்டது என்றார். இந்த நிலையில், அரசுத் தரப்பு வாதம் முடிவடையாததால், வழக்கின் விசாரணை புதன்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

Exit mobile version