கோவில்பட்டியில் 45 நாட்கள் நடைபெறும் அரசு பொருட்காட்சி

கோவில்பட்டியில், தமிழக அரசின் சார்பில், 45 நாள்கள் நடைபெறும் பொருட்காட்சி, தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இஎஸ்ஐ மருந்தக மைதானத்தில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய அரசு பொருட்காட்சியின் தொடக்க விழா நடைபெற்றது. செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை இயக்குநர் தொடங்கி வைத்தார்.இப்பொருட்காட்சியில் வேளாண்மை துறை, தோட்டக்கலைத்துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி துறை, பொதுப்பணித்துறை உள்ளிட்ட 27 அரசு துறைகளின் அரங்குகளும், ஆவின், மகளிர் திட்டம், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், கைத்தறி துறை உள்ளிட்ட அரசு சார்பு நிறுவனங்களின் அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version