நெல்லை மாவட்டம் கங்கைகொண்டான் அருகே வேன் மற்றும் அரசு பேருந்துகள் அடுத்தடுத்து மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழ்ந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரைக்குடியில் இருந்து திருநெல்வேலி நோக்கி வந்த வேன் ஓட்டுனரின் கட்டுப்பட்டை இழந்து சாலை தடுப்பு சுவரில் மோதியது. மதுரையில் இருந்து மார்த்தாண்டம் நேக்கி சென்று கொண்டிருந்த பேருந்து பின்னால் லேசாக மோதியது.
அப்போது, சென்னையில் இருந்து நாகர்கோயில் நோக்கி வந்த அரசு பேருந்தும் வேன் மீது பலமாக மோதியது. இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்தது. சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்தனர். தகவல் அறிந்து வந்த கங்கை கொண்டான் போலீசார் உடல்களை மீட்டனர். பலத்த காயமடைந்த 15க்கும் மேற்பட்டோர் அரசு பளையங்கோட்டை அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிகிச்சை பலனின்றி 2 பேர் பலியானதால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது.