பொதுமக்களுக்கு சிரமமில்லாமல் வெங்காயம் கிடைக்க நடவடிக்கை : தமிழக அரசு

இரண்டு அல்லது மூன்று நாட்களில் வெங்காயம் விலை குறையும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தலைமையில் வெங்காய விலை உயர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, இரண்டு அல்லது 3 நாட்களில் வெங்காயம் விலை குறையும் என்றும், அவசியம் ஏற்பட்டால் அரசு கொள்முதல் செய்து விற்பனை செய்யப்படும் எனவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பொதுமக்களுக்கு சிரமமில்லாமல் வெங்காயம் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூட்டத்தின் வாயிலாக தெரிவிக்கப்பட்டது. அமைச்சர்கள் முன்னிலையில் நடைபெற்ற கூட்டத்தில் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Exit mobile version