நாட்டு சர்க்கரை தயாரிப்பதன் மூலம் நல்ல லாபம்- விவசாயிகள் மகிழ்ச்சி

நாட்டு சர்க்கரை தயாரிப்பதன் மூலம் நல்ல லாபம் கிடைப்பதாக விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை அடுத்த நம்மியந்தல் கிராமத்தில் ஏராளமான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்து வருகின்றனர். இரண்டு ஏக்கரில் விவசாயி, வாசு கரும்பு பயிரிட்டு வருகிறார். இவர் அறுவடை செய்யும் கரும்புகளை ஆலைக்கு அனுப்பாமல் சர்க்கரை தயாரித்து விற்பனை செய்து வருகிறார். நான்கு டன் கரும்புகளில் 400 கிலோ வரை நாட்டு சர்க்கரை தயாரிக்கப்படுவதாகவும், இதனால் நாள் ஒன்றுக்கு 5 ஆயிரம் ரூபாய் வரை லாபம் கிடைப்பதாக விவசாயி வாசு மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

Exit mobile version