ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்துவுக்கு டெல்லியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கத்தாரில் நடைப்பெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து தங்கம் வென்று டெல்லி திரும்பினார். அவருக்கு டெல்லி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. விமான நிலைய வளாகத்தில் காத்திருந்த இந்திய தடகள அமைப்பினர், கோமதி மாரிமுத்துவுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், கத்தாரில் உள்ள தமிழர்கள் தன்னை குடும்ப உறுப்பினரை போல் பார்த்துக்கொண்டதாக உணர்வுப்பூர்வமாக தெரிவித்தார்.