திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 6 பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் திருச்சி வந்தது. அதில் வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை செய்தனர். 6 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் கொண்ட அதிகாரிகள், அவர்களின் உடமைகளை சோதனை செய்தனர். ஆயிரத்து 832 கிராம் தங்கமும், செயின் மற்றும் கட்டி வடிவில் ஆயிரத்து 317 கிராம் தங்கத்தை அவர்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாயாகும். இதையடுத்து, தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version