திருச்சி விமானநிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

திருச்சி விமான நிலையத்தில் 17 லட்சம் ரூபாய் மதிப்புள்ள கடத்தல் தங்கம் வெளிநாட்டு பயணிகளிடமிருந்து சுங்கத்துறை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது.

மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து திருச்சி வந்த மலிண்டோ விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். சென்னையைச் சேர்ந்த தியாகராஜன் என்பவர் 259 கிராம் எடை கொண்ட தங்கத்தை தனது கைப்பையில் மறைத்து வைத்து கடத்தி வந்தது தெரியவந்தது. அதேபோன்று, மலேசியாவில் இருந்து வந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணித்த சரஸ்வதி வீரப்பன் என்பவர் 240 கிராம் எடை கொண்ட 8 வளையல்களை தனது கைகளில் அணிந்து கடத்தி வந்தது தெரியவந்தது. தங்க வளையல் மற்றும் தங்க கட்டிகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version