சென்னை விமான நிலையத்தில் கடத்தல் தங்கம் பறிமுதல்

சென்னை விமான நிலையத்தில் பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் 41 லட்சம் ரூபாய் மதிப்பிலான கடத்தல் தங்கம் மற்றும் வெளிநாட்டு பணம் சிக்கியது.

சென்னை விமான நிலையம் வழியாக நடைபெறும் கடத்தலை தடுத்து நிறுத்தும் நோக்கில் சுங்கத்துறை அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில், சுங்கத்துறை அதிகாரிகளுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் ஷார்ஜாவிலிருந்து சென்னை வந்த ஏர் இந்திய விமானத்தில் சோதனையிட்டனர். அப்போது ஒரு இருக்கையின் அடியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 15 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான 465 கிராம் தங்க கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் இலங்கை மற்றும் கோலாலம்பூர் செல்ல சென்னை விமான நிலையத்திற்கு வந்த இரு பயணிகளிடம் இருந்து 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான யூரோ மற்றும் சவுதி ரியால்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Exit mobile version