மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட தங்கம் பறிமுதல்!

மலேசியாவிலிருந்து கடத்திவரப்பட்ட ஒரு கிலோ தங்கம் திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டது. மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானப் பயணிகளிடம், சுங்கத்துறை வான் நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். அப்போது சிவகங்கையைச் சேர்ந்த பாஸ்கர், ஒரத்தநாட்டை சேர்ந்த ராஜா, ராமநாதபுரத்தைச் சேர்ந்த நூர் மற்றும் மானாமதுரையைச் சேர்ந்த உதயன் ஆகியோரிடமிருந்து ஒரு கோடியே 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 1.773 கிலோ தங்க நகைகள் மற்றும் தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. நகைகளை உடைமைகளில் மறைத்து வைத்திருந்த அவர்களிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version