தங்கத்தின் விலை ஒரேநாளில் சவரனுக்கு ரூ.512 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு 512 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் 25 ஆயிரத்து 688க்கு விற்கப்படுகிறது.

கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாக உள்ளது. இதேபோல வெள்ளி விலையும் தொடர்ந்து ஏறிவருகிறது. வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் தொடர் முகூர்த்தங்கள் நிலவி வருவதால் விலையேற்றம் தொடர்ந்து வருவதாக மதிப்பீட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் ஆபரணத் தங்கம் சவரனுக்கு ஒரே நாளில் 512 ரூபாய் உயர்ந்து 25 ஆயிரத்து 688 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் தங்கத்தின் விலை 64 ரூபாய் உயர்ந்து ரூ. மூவாயிரத்து 211க்கு விற்பனை ஆகிறது. ஒரே நாளில் தங்கத்தின் விலையில் 512 ரூபாய் உயர்ந்துள்ளது திருமணம் நிச்சயத்துள்ளவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே வெள்ளி விலை கிலோவிற்கு 60 ஆயிரம் உயர்ந்தும் ஒரு கிராம் வெள்ளி 60 காசுகள் உயர்ந்தும் விற்கப்படுகிறது.

Exit mobile version