சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.304 உயர்வு

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 744 ரூபாயாக உயர்ந்துள்ளது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ஆயிரத்து 837 ரூபாயில் இருந்து 38 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 875 ரூபாயாகவும், ஒரு சவரன் 30 ஆயிரத்து 696 ரூபாயில் இருந்து 304 ரூபாயாக அதிகரித்து 31 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 29 ஆயிரத்து 440 ரூபாயாக இருந்த நிலையில், 304 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் 29 ஆயிரத்து 744 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை, கிராமுக்கு 3 ஆயிரத்து 680 ரூபாயில் இருந்து 38 ரூபாய் அதிகரித்து, 3 ஆயிரத்து 718 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் வெள்ளியின் விலை கிராமுக்கு 90 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 10 காசுக்கும், ஒரு கிலோ வெள்ளி ஆயிரத்து 900 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Exit mobile version