தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வு

தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ள நிலையில், சென்னையில் ஒரு சவரன் தங்கத்தின் விலை 25 ஆயிரம் ரூபாயை தொட்டது.

ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் காணப்படுகிறது. இந்திய ரூபாய்க்கு நிகரான அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. மும்பை பங்கு சந்தையிலும் இதன் பாதிப்பு எதிரொலித்தது. தை மாதத்தையொட்டி தமிழகத்தில் அதிகளவில் திருமணங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இவை தங்கத்தின் விலை உயர்ந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சென்னையில் ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை இன்று 25 ஆயிரம் ரூபாயை தாண்டியுள்ளது. ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 3 ஆயிரத்து 160 ரூபாய்க்கும், ஒரு சவரன் 25 ஆயிரத்தி 280 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது.

Exit mobile version