கோவையில் தங்க நகை தொழில் பூங்கா… தமிழக அரசுக்கு தொழிலாளர்கள் நன்றி

கோவை மாவட்டம் பேரூரில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்த தமிழக அரசுக்கு, நகை செய்யும் தொழிலாளர்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

கோவை செய்யப்படும் தங்க நகைகள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. கோவை பேரூரில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க வேண்டும் என்று தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், பேரூர் பகுதியில் தங்க நகை தொழில் பூங்கா அமைக்க இடம் தேர்வு செய்துள்ளதாக சட்டப்பேரவையில் ஊரகத் தொழில்துறை அமைச்சர் பென்ஜமின் தெரிவித்தார். இந்தத் திட்டத்திற்கு வழி வகுத்துக் கொடுத்த அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, பென்ஜமின் அகியோருக்கு தங்க நகை தொழிலாளர்கள் மற்றும் பொற்கொல்லர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Exit mobile version